Breaking

மீடியாக்களில் பேச தடையா?

நம்நாடு செய்திகள்
0
பதிவு செய்த நாள் 12/10/17, 19:11 - Sahay Peter: நேற்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வுக்கான முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் மதுபானங்களின் விலையேற்றம் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டது. இப்படியான அலுவல் ரீதியான கூட்டம் முடிந்ததும், "முதல்வர்" அமைச்சர்களிடம் சில நிமிடங்கள் பேசி இருக்கிறார். ‘அம்மா இருந்தவரைக்கும் நாம யாரும் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுத்தது கிடையாது. யாரும் எந்த மீடியாவுக்கும் பேசியதும் கிடையாது. ஆனால், அம்மா மறைவுக்குப் பிறகு இப்போ எல்லோருமே அவங்களுக்கு தோன்றியதை பேசுறோம். மீடியாவிடம் எல்லோருமே நீங்க நினைச்ச விஷயத்தை சொல்லிடுறீங்க. இதை நான் தப்பா சொல்லவில்லை. எல்லோருக்கும் எல்லாம் பேசுறதுக்கு சுதந்திரம் இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி செல்லூர் ராஜு அண்ணன் அவரோட மனசுல பட்டதை எதேச்சையாக சொல்லப்போக அது, பெரிய விஷயமாகிடுச்சு. நாம யாருமே மனசுல ஒண்ணு வெச்சு, வெளியில ஒண்ணும் பேசுவது கிடையாது. இங்கே அதுதான் பிரச்னை ஆகிடுது. கட்சியில ஸ்போக்ஸ்பர்சன் என நிறைய பேரு இருக்காங்க. அவங்க எதைச் சொன்னாலும் பிரச்னை இல்லை. ஆனால், அமைச்சர்களாக இருப்பவர்கள் எது சொன்னாலும் அது பிரச்னையில் வந்து முடியுது. நானும் ஓ.பி.எஸ். அண்ணனும் பேசி சில முடிவுகளை எடுத்து இருக்கோம். மீடியாவுக்கு உங்களை யாரும் பேச வேண்டாம் என சொல்லவில்லை. தாராளமாக பேசுங்க. ஆனால் உங்க துறை சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்க. அதைத் தவிர்த்து கட்சி தொடர்பாகவோ, பழைய விஷயங்கள் தொடர்பாகவோ பேச வேண்டாம். அதையும் தாண்டி பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், என்கிட்டையோ அல்லது ஓபிஎஸ் அண்ணன்கிட்டையோ தகவல் சொல்லுங்க. என்ன பேசலாம் என்பதை டிஸ்கஸ் பண்ணிட்டுப் பேசுங்க. நீங்க சொல்ற கருத்துக்களை உங்களோட சொந்தக் கருத்துக்களாக இங்கே பார்க்க மாட்டாங்க. நீங்க அதிமுகவின் பிரதிநிதியாகத்தான் பார்க்கப்படுவீங்க. இனி கட்சி தொடர்பாக எது பேச வேண்டும் என்றாலும் நானோ அல்லது ஓ.பி.எஸ் அண்ணனோ பேசுறோம். அதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறோம்..’ எனப் பேசி இருக்கிறார். அவர் பேசி முடித்ததும் செல்லூர் ராஜு, ‘நீங்க சொல்றது சரிதாண்ணே... நான் அதைப் பேசணும்னு அங்கே போகலை. நான் டெங்கு காய்ச்சல் பத்தி பேசிட்டு இருந்தேன். மீடியாக்காரங்க திடீர்னு அந்தம்மா பத்தி கேட்டதும் நானும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். எல்லோருமே அப்படித்தான் மாட்டிக்கிறோம். அப்படி மீடியாவுல இருந்து கேட்டாலும்கூட, அதற்கு பதில் சொல்லாம வந்துடணும்னு இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன்’ என சொல்லி இருக்கிறார். ஆனால் முதல்வரோ, ‘இது உங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லலை. எல்லோருக்குமே இந்த சங்கடம் இருக்கும். அதை தவிர்க்கத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துருக்கோம். நீங்க யாரும் இதை தப்பா நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும். அவ்வளவுதான்!’ என அமைச்சர்கள் பேசுவதற்குத் தடைவிதித்துக் கூட்டத்தை முடித்திருக்கிறார் முதல்வர்!”

Post a Comment

0Comments

Post a Comment (0)