திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மாதவ் என்ற 9ஆம் வகுப்பு மாணவர், தான் உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை (CPU) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin
அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்ட முதலமைச்சர், மாதவின் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். மேலும் தொடர் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுடன் ஈடுபடுமாறும் மாதவை முதலமைச்சர் உற்சாகப்படுத்தினார்.
Post a Comment
0Comments