Imported post: Facebook Post: 2021-07-27T10:26:32
7/27/2021 06:56:00 AM
0
#கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முன் காலத்தில் நமக்கு அன்பானவர்களாக இருந்தவர்களிடம், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடந்து வந்த சில தவறுகளை எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்குப் புரியும் வகையில் பேச வேண்டும், குறிப்பாக நீட் தேர்வு, மின்கட்டண குளறுபடி போன்றவற்றைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியாக போராட முன்வரவேண்டும், என்று கூறிய போது, இப்போ என்னப்பா அவசரம், ஆட்சிக்கு இப்ப தானே வந்திருக்காங்க, ஒரு மூனு மாசம் போகட்டும், பார்த்துக்கலாம் னு சொன்னாங்க....
ஆனா ஒரே ஒரு ரெய்டுதான் நடந்துச்சு, உடனே போர், போர், னு போர் முரசு கொட்டிட்டாங்க....
இதுலருந்து என்ன தெரியுதுன்னா, இவர்கள் தொண்டர்களை உசுப்பேற்றிவிட்டு, அவர்களின் உழைப்பில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள், நாம தான் எங்க அய்யா சாணக்கியர், ஒரே தூக்கா தூக்கி நட்டுவச்சிடுவாரு னு நாம தான் வெட்டியா உழைச்சிருக்கோம்❓❓❓