Breaking

மிரட்டி கையெழுத்து வாங்கும் திமுக ! பொதுமக்களே உஷார்...

நம்நாடு செய்திகள்
0

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திமுக.,வை சேர்ந்த பெண்களிடம், சிஏஏ குறித்து ஒருவர் விளக்கம் கேட்க, அவர் 'சம்மந்தமே இல்லாமல் ஏனோ தானோ என்று பிதற்றிய' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தி வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தற்போது கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் அருகில் உள்ள காரம்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே திமுக.,வை சேர்ந்த சில பெண்கள், வருபவர்களிடம் கையெழுத்து கேட்டு பெறுகின்றனர். அதில் ஒருவர், ஏன் கையெழுத்து போட வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்.













சிஏஏ குறித்த 'அ.. ஆ..' கூட தெரியாத அப்பெண்கள், 'மோடி கேக்குற உரிமைய தரல.. நஷ்ட ஈடு காட்டுறாரு.. அத திருத்தி நடவடிக்கை எடுத்து கொண்டு வர கையெழுத்து கேக்குறோம்.. கையெழுத்து போட்டா போடு.. இல்லாட்டி கிளம்பு' என மிரட்டல் தொனியில் பதிலளிக்கின்றனர்.



பேமண்ட் என்று டார்கெட்



என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என அந்த நபர் திரும்ப கேட்க, 'டெல்லி போய்ட்டு, நடவடிக்கை எடுத்துட்டு, வாட்ஸ்அப் பண்றோம்' என பதிலளிக்கின்றனர். தொடர்ந்து அவர், எதுக்கு கையெழுத்து வாங்குகிறீர்கள் என கேள்வியால் துளைக்க, 'சதீஷ்-ஐ கூப்பிடு' என அப்பெண்கள் மிரட்டுகின்றனர். இவை அனைத்தையும் அந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது.



'சிஏஏ குறித்த அடிப்படை கூட தெரியாமல், திமிராக பேசும் அப்பெண்களிடம், பொதுமக்கள் பலரும் என்னவென்று கேட்காமலேயே கையெழுத்து போட்டு போகின்றனர். இவர்களுக்கு இத்தனை கையெழுத்து வாங்கினால், இவ்வளவு பேமண்ட் என்று டார்கெட்' என வீடியோ எடுத்த நபர் அங்கிருந்தவர்களிடம் புலம்பியபடி கிளம்பிச் சென்றுள்ளார்.



திமுக.,வை சேர்ந்த சிலர், வீடியோ எடுத்த நபரை பின்தொடர்ந்து வந்து, எடுத்த வீடியோவை அழிக்கச்சொல்லி மிரட்டியதாகவும், அவர் சமாளித்து அங்கிருந்து சென்றதாகவும், 'ஆட்சிக்கு வராமலேயே திமுக இத்தனை அராஜகம். வந்தால் தமிழகம் என்னவாகும்?' என அங்கிருந்தவர்கள் கூறி சென்றனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)