Breaking

உள்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் பேச்சு!

நம்நாடு செய்திகள்
0


காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான அவகாசம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதமுள்ளன. ஆனால் காவிரிப் பிரச்சினை குறித்துத் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றியும் பிரதமரைச் சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நான்கு மாநில அதிகாரிகளுடன் நீர் வளத் துறை அமைச்சகம் கூட்டம் நடத்திய நிலையிலும், இன்னும் இதுதொடர்பான எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (மார்ச் 15) தமிழகத்தின் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமானது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டார். காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது, "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கோடைக்காலம் வருவதற்கு முன்னதாக மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான் தமிழக விவசாயப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்" என்று உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)