
யுத்தகாலங்களில் சண்டைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உயிருடன் பிடிபட்டு அரசியல் கைதியாக சிறைப்படுத்தபட்ட ஒருசிறீலங்கா இராணுவ வீரனை காண அவரது காதல்மனைவி சாமாதான காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் அமைப்பிடம் அனுமதிபெற்று வன்னி வந்து சேர்கின்றார்.கைதியாக சிறைபடுத்த பட்டிருக்கின்ற தனது கணவனை சந்தித்து கதைக்கின்றார்.சந்தித்துவிட்டு அவர் தனது இருப்பிடம் திரும்ப எண்ணும்போது நேரம் இரவாகிவிடுகின்றது.
அந்தபெண் அவரை வழியனுப்ப நின்றிருந்த புலி உறுப்பினரிடம் இரவாகிவிட்டது இந்த நேரத்தில் நான் திரும்புவது பாதுகாப்பில்லை.நான் ஆமி கண்ணில் பட்டுவிட்டால் புலிகளுக்கு உளவு சொல்லுகின்றேன் என்றெண்ணி என்னை சுட்டு கொன்றுவிடுவார்கள் எனவே நான் இரவு இங்கேயே தாங்கிவிட்டு விடிந்ததும் காலையில் சென்றுவிடுகின்றேன் என்று கூறுகின்றாள். (அந்தபெண் சிங்களத்தில் கூறுவது சிங்களம் அறிந்த புலிவீரனால் மொழிபெயர்த்து கூறப்படுகின்றது)
இப்பெண்ணின் வேண்டுகோள் தலைவருக்கு சொல்லபடுகின்றது.தலைவரும் ஆலோசித்துவிட்டு சரி கவனமாக தங்கவைத்து காலையில் பாதுகாப்பாக அனுப்பிவைத்திடுங்கோ என்கின்றார்.அவரை எங்கே தங்க வைப்பது என்று கேட்க அந்தபெண் எங்க விருப்பபடுகின்றாறோ அங்கேயே தங்கவையுங்கள் என்று தலைவர் சொல்ல அதன்படி அந்த பெண்ணிடம் கேட்க அவர் தனது கணவனுடன் தங்கவிருப்புவதாக கூறுகின்றார்.அதன்படியே அவரது கணவருடன் இரவில் தங்கவைக்கப்பட்டு விடிந்ததும் அந்தபெண் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றார்.
இதுநடந்து முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த சிங்கள இராணுவ வீரரின் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வருகின்றது அதில் அப்பெண் "நான் என் காதல் கணவனை காணவந்தபோது மிகவும் கண்ணியத்துடன் என்னை நடத்தினீர்கள் உங்கள் அன்பில் நான்நெகிழ்ந்தேன் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.அன்றிரவு நான் என் கணவருடன் தங்கியிருந்தபடியால் நான் இப்ப கருவுற்றிருக்கின்றேன் இது எனது தாய் தந்தை சகோதரங்கள் உறவினர்களுக்கு தெரியவந்தால் உன் கணவன் உன்னுடன் இல்லாதபொழுது இதெப்படி நடந்தது என்று கேட்டு என்னை அவமானப்படுத்தி என் ஒழுக்கைத்தை சந்தேகப்பட்டு என்னை கேவளப்படுத்தி விடுவார்கள் எனக்கு விபச்சாரி ஒழுங்கங்கெட்டவள் என்று என்னை நாயிலும் கேவளமாக நடத்துவார்கள்.என் வாழ்க்கையே கேள்விகுறியாகிவிடும் இதற்க்குமேல் நான் உயிர் வாழமுடியாது நான் வாழ்வதும் உயிரை விடுவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது கண்ணீருடன் அவசரமாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன் என் வாழ்க்கை உங்கள் கையில்தான் இருக்கின்றது என்று அந்த கடிதத்தில் எழுதியிருக்கின்றார்.
இந்த கடிதம் தலைவரின் கவனத்திற்க்கு வருகின்றது மிகவும் கருணையோடு தாயுள்ளத்தோடு அந்த கடிதத்தை பரிசீலித்த தலைவர் சிலவிநாடி யோசனைகளுக்குபின் எங்களால் அந்த பெண்ணிண் கற்புக்கு எந்த கலங்கமும் வந்துவிடக்கூடாது என்றுகூறி கைதியாக உள்ள அந்த இராணுவ வீரனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய உத்தரவிடுகின்றார்.ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் போரிடும்போது உயிரோடு பிடிபடும் இராணுவ வீரர்களை மீண்டும் அதே நாட்டிடம் உயிருடன் ஒப்படைக்க ஏகப்பட்ட சட்டதிட்டங்களை,விதிமுறைகளை சர்வேதேச நாடுகள் கடைபிடிக்கும்போது அப்படி எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் அந்த பெண்ணிண் மானம் காக்க அந்த இராணுவ வீரனை எந்தவித சிறு நிபந்தனையுமன்றி விடுதலைசெய்த உத்தரவிட்டார் எங்கள் தலைவர்.அண்ணண் பிரபாகரனை தவிர வேறு எவனுக்கும் இந்த துணிச்சல் வராது.இந்த செய்தியை அறிந்த அந்த இராணுவ வீரன் "உங்கள் அண்ணண் இந்தநாடு முழுமைக்கும் ஆண்டால் உலக நாடுகளுக்கெல்லாம் சிறீலங்கா முண்ணுதாரனமாக திகழும்.இனிநான் இராணுவத்தில் இருக்கமாட்டேன் புலிகளுக்கு ஏதிராக போரிடமாட்டேன் என்று கண்ணீருடன் கூறி விடுதலையாகி செல்கின்றார். #தகவல்_பிரபாசெழியன்.