
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காண்போம்.
சுகாதாரத் துறை
>>2018-19ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு - ரூ.11,638.44 கோடி
(முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.10,158 கோடி)
நடப்பு நிதியாண்டில் நிதி உயர்வு - ரூ.1,480 கோடி.
>>அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு நிதி - ரூ.519.81 கோடி
>>சத்துணவுத் திட்டத்திற்கு சமூக நலத்துறை வாயிலாக ஒதுக்கப்படும் நிதி - ரூ.5,611 கோடி.
>>முதல்வர் மருத்துவக் காப்பீடு - ரூ.1,361.80 கோடி.
பெண்களுக்கான நலத் திட்டங்கள்
>>திருமண உதவித்தொகை திட்டத்திற்கு - ரூ.724 கோடி
>>நாப்கின் வழங்கும் திட்டம் - ரூ.60.58 கோடி
>>பெண்களுக்கான இருசக்கர வாகன உதவித்தொகை திட்டத்திற்கு - ரூ.250 கோடி
>>டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு - ரூ.18,000 கோடி.
(கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது 6,000 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது)
கல்வி
>>பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு - ரூ.27,205 கோடி
(2017-18ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.26,932 கோடி. நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.273 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது)
>>மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.758 கோடி
>>இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ.3,850 கோடி
>>உயர்கல்வித் துறைக்கு ரூ.4,620 கோடி
>>நபார்டு வங்கி உதவியுடன் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி.
விவசாயம்
>>வேளாண் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.8,196 கோடி
>>2018-19ஆம் நிதியாண்டில் 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு.
(கடந்த நிதியாண்டில் இதன் இலக்கு 100 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது)
>>நெல் உற்பத்திக்கான உதவித்தொகை - ரூ.200 கோடி
>>நுண்ணீர் பாசன மேம்பாட்டிற்கு ரூ.3,715 கோடி
>>உழவன் அலைபேசி செயலி உருவாக்கம்
>>கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா
>>கால்நடைப் பராமரிப்பிற்கு ரூ.1,227.89 கோடி
>>பால்வளத் துறைக்கு ரூ.130.82 கோடி
>>கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி
>>கரும்பு விலை நிர்ணயத்திற்கு புதிய முறை காணுதல்.
மீன்வளத் துறை
>>மீன்வளத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.1,016 கோடி
>>ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 177 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
>>ரூ.200 கோடி செலவில் நாகை மாவட்டத்தின் வெள்ளம்பள்ளம் மற்றும்
தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம்.
>>ராமநாதபுரம் மாவட்டத்தின் குத்துக்கல்லில் ரூ.3.70 கோடி செலவில் மீன்பிடித்தளம்
>>கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணத்தில் மீன் பதப்படுத்தும் பூங்கா.
>>ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு அதிர்வெண் கருவிகள் வழங்குதல்
மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்
>>3 லட்சம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கு இலக்கு.
>>பேரிடர் நிவாரண நிதியாக ரூ.786 கோடி.
>>வருவாய்த் துறைக்கு ரூ.6,144 கோடி நிதி.
>>நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.13,986.48 கோடி நிதி.
>>மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.545.21 கோடி நிதி.
>>3000 புதிய பேருந்துகள்
>>வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.2,696.14 கோடி நிதி.
>>ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,207 கோடி நிதி.
>>பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.333.82 கோடி நிதி
>>நீர்வள ஆதாரத் துறைக்கு ரூ.5,127 கோடி நிதி
>>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி
>>சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு ரூ.173 கோடி
பட்ஜெட் உரையில் பேசிவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் நிதி வருவாய் 2018-19ஆம் ஆண்டில் 1.76 லட்சம் கோடியாக இருக்கும் எனவும், செலவு ரூ.2.04 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதன்மூலம் 2018-19ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.53,586 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது. மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவிகிதமாக இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அவினாசி - அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.1,789 கோடி செலவில் நிறைவேற்றப்படும் எனவும் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். தகவல்கள் மின்னம்பலம்.காம்